ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சின்னவள் சிரிக்கிறாள்..

வீட்டின் கூடம் தாண்டி விளையாடித்திரிந்தோம்.

சிட்டுக்குருவிகள் வீட்டுக்குள்கூடுகட்டும்

ஒரு நாளும் வீட்டுக்குள் படுத்ததில்லை
வீதி எங்கள் பள்ளியறை.

சனி, 26 செப்டம்பர், 2015

மனுசப்பயலே....

நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்...இரண்டு கைபேசி வைத்திருக்கின்றீர்களா...ATM இயந்திரத்தில் பணமெடுத்துவிட்டு அதற்கான ரசீதை கசக்கிப்போட்டு விடுகின்றீர்களா...புகைக்கின்றீர்களா...

பெண்ணின் பெருந்தக்க...

இறைவன் ரொம்ப பிஸியாக இருப்பதாலும் அடிக்கடி தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுவதாலும்.. தன்னுடைய பணிகளை பார்த்துக்கொள்ள

கையளவு உலகம்

கையளவு உலகம்

கால்ச்சட்டை எந்நேரமும் கழன்றுவிழத்துடிக்கும் பருவத்தில் பக்கத்துவீட்டு அண்ணன் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அண்ணனிடம் ஒரு

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

புதிதாய் பிறந்தேன்....

”மனுசங்க...என்னமா எழுதியிருக்காங்க...எத்தனை பக்கங்கள்..எவ்வளவு தகவல்கள்... என்ன நடை...விறுவிறுப்பு...
சனியன் ...தூங்க விட மாட்டேங்குதே....

சென்னையில் என்னை மோதின......!

எத்தனை கண்டங்கள் என டீச்சர் கேட்ட பொழுது ஏழு என்று  ஈஸியாக சொல்லிவிட்டேன் பள்ளி நாட்களில். நாஸா குறைந்தது வருடத்திற்கு ஒரு கண்டமேனும் கண்டுபிடிப்பதாக அறிந்து கொள்கிறேன்........
          அவையெல்லாம் தயவுசெய்து சாதனைகளின் பட்டியலில் சேர்க்காதீர்கள்.....
         எனக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் கண்டங்கள் தாண்டுவதே நித்யானுபவம்......
         ஏழு கடல்,ஏழுமலை,ஏழு கண்டங்கள் தாண்டியிருக்கும் ஒரு பூவைப்பறிக்க என்னிடம் நீங்கள் என்னிடம் கூறினால் நானெல்லாம் அப்படிப்பட்ட பூக்களால் ஒரு மாலையே செய்து தினந்தோறும் உங்கள் பாதாரவிந்தங்களில் சம்ர்ப்பிப்பேன்.

சிறிதுமில்லாத, பெரிதுமில்லாத ஒரு சாலையின் மேல் தான் வீடு இருக்கிறது.
எப்போதும் சாலையை எளிதாய் கடக்க முடிவதில்லை.
இந்த மனிதர்கள் ஏன் இப்படிப் பறக்கிறார்கள்?
காலை ஏழுமணிக்கும் இப்படித்தான் இருக்கிறது..
இரவு இரண்டு மணிக்கும் இப்படித்தான் இடம்பெயர்கிறார்கள்.
இவர்களின் வேகத்தில் பயணித்தால் முருகனெல்லாம் உலகத்தை சுற்றும் போட்டியில் மூன்றாமிடம் கூட பிடிக்க முடியாது.

இவர்கள் சாலையை கடக்கும் லாவகமும், கிடைக்கும் சந்துகளில் சீறிப்பாயும் வேகமும்,
இந்தியா முன்னேற 2020 எல்லாம் தேவைப்படாது.

நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையுள்ள நாய்களைக்கூட(எந்த பூடகமுமில்லை)இங்கே தான் பார்க்கிறேன்.

தாயின் நினைவிலேயே நாளெல்லாம் வாழும் மாந்தர்.
எந்த வார்த்தை பேசும் முன்பும் தாயின் மறுபெயர் சொல்லியே ஆரம்பிக்கின்றனர்.

ஒரு மொழி விளங்காத தேசத்தில் பாஸ்போர்ட் தொலைத்தவனாய் நடந்து கொண்டிருக்கின்றேன் சாலையில்..
விரையும் கார்கள்..
ஆணும் பெண்ணுமாய் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் சாகசம் செய்யும் மோட்டார் வாகனங்கள்..
சரிக்குசரி மல்லுகட்டும் மாநகரப்பேருந்துகள்...

ஒருவேளை இங்கு வந்துதான் நான் ஓட்டுனர் உரிமம் எடுக்க வேண்டி இருந்திருக்குமெனில்.
எனக்கு வாழ்நாள் முழுவதும் வாகனப்பிராப்தம் வாய்த்திருக்காது.

மிகக்கவனமாகத்தான் நடக்கிறேன்.
சர்க்கஸ் காட்சிகளில் வலையிலிருந்து மேழெலும் சாகசக்காரியென உச்சந்தலையில் கால்களை அழுத்தி பறந்து போகிறது ஒரு காகம்.
மேலே பார்க்கிறேன்.
சாந்தமாய் மின்கம்பியில் அமர்ந்து என்னைப்பார்த்து சிரிக்கிறது.

அட..அற்பப் பறவையே.. உனக்கு அவ்வளவு திமிரா?
மனிதனென்றும் பாராமல் இது என்ன விளையாட்டு?

நான் பாரதியுமில்லை..
நீ என் ஜாதியுமில்லை...

இன்னொரு முறை இப்படி செய்தால்.. தொலைத்துவிடுவேன் ஜாக்கிரதை..

பத்தடி நடந்திருப்பேன்...

இந்தமுறை மிக அழுத்தமாக கால்களை அழுத்திவிட்டு பறந்து போகிறது அதே காகம்.

ஒன்னும் புடுங்க முடியாது... இது சென்னையின் காகம்..


சரி வாங்க  பார்ப்போம்..

இனி சாலைகளில் நடக்கும் போது சனியின் வாகனத்தையும் கவனித்து நடக்க வேண்டியிருக்கும்..

ஆக... சென்னையில் என் மீதான முதல் மோதல்.....

சனி, 15 ஆகஸ்ட், 2015

சுதந்திர தின வாழ்த்துகள்....எனக்கு.

லொட லொட பேருந்தில் இ்ந்தமுறை போகக்கூடாது.பயணம் முழுவதும் தூங்கவேண்டும்.
அப்பத்தான் நாளை முகம் கொஞ்சமேனும்(?)பார்க்கும்படி இருக்கும்.மூத்திரசந்தில் மூன்றாகவதாக நின்ற பேருந்து வாய்த்தது.இருக்கை அளவுக்குமீறி சாய்ந்து கொடுத்தது.சிவகார்த்திகேயன் மிகத்தீவிரமாய் போலிஸ்வேலை பார்த்த படம் ஓடிக்கொண்டிருந்தது.
மூச்சை அவ்வப்போது நிறுத்தி நிறுத்தி பயிற்சி எடுத்த முக்கால் மணி நேரத்திற்கு பிறகு முணங்கத்தொடங்கியது பேருந்து.
வழக்கமாய் ஊர் எல்லை தாண்டி ,அருவாள் வைத்திருக்கும் கருப்பருக்கு ஒரு காற்று முத்தம் கொடுத்து, பிறந்த ஊர் தாண்டும் போது எங்கோ ஒரு இடத்தில் தெரியும் ஒற்றை வெளிச்சம் கிளறிவிட்டுப்போகும் பால்யத்தை ,வலிய அணைத்து உறங்கத்தொடங்கும் நேரம் அடுத்த ஊர் வந்துவிடும்.
இந்தமுறை காற்றுமுத்தம் கருப்பருக்கு வாய்க்கவில்லை.
கண்களை இறுக்க மூடி உறங்கிவிட்டேன். ஐந்து மனிக்கெல்லாம் போய்விடலாம் என்று பயணத்தை தொடங்கும் போது சொன்னவன் ,ஒரு தேர்ந்த அரசியல்வாதி ஆவதற்கு அனைத்துத்தகுதிகளும் உடையவன்.
காலை எட்டுமணிக்கு நகர எல்லையை தொடும்போது,சில இடங்களில் "ஜனகன மன" கேட்கத்தொடங்கியது.
இரண்டு நாட்களாய் தொடர்ந்த வேலைகள்..
அநேகமாய் உலகின் எல்லா சிறை பற்றிய குறிப்புகளும் தேடிவிட்டேன்.
இருபது சுகி.சிவம் ஒலி நாடாக்கள்.
கோப்மேயர் தொடங்கி கோபிநாத் வரை புத்த்கங்கள்.
என் வீட்டு கண்ணாடிக்குமட்டும் வாய்ப்புயிருக்குமாயின் பலமுறை தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு அதன் முன்னே உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
எப்படித்தொடங்குவது?பாரதியா...பாரதி தாசனா...?
ஒரு இரவு முழுவதும் தொடர்ந்த வழக்காடுமன்றத்தின் தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் போகுமளவுக்கு காதறு நிலை.
கண்ணன் சிறையில் பிறந்த கதை,வ.உ.சி. செக்கிழுத்த கொடுமை,கொஞ்சமாய் நெப்போலியன் ஹில்லின் தன்னம்பிக்கை மற்றும் தேவையான அளவு உப்பு,புளி,காரம்,.மன்னிக்கவும் ....வரலாறு,வெள்ளையர் கொடுமை,சிறையின் சிறப்புகள் சேர்த்து ஒரு காகித்தில் இரண்டுற,மூன்றுற,...பலமுற அரைத்து ,கடந்த நாளில் காலை வெறும் வயிற்றில் மனப்பாலாய் பலமுறை அருந்தி,பீதியாகும் கோட்டுக்கு கொஞ்சம் கீழே திரும்பினேன்.
அடுத்த கவலை உடை என்னும் கொடுமையாய் வந்து நின்றது.
எப்போதோ ஒருமுறை அவள் நல்லாயிருக்கு(உண்மையென்று இன்னும் நம்புறேனே)
என்ற ஜிப்பாவை உதறியெடுத்து,அதற்கான பேண்ட்டை பெரும்பாடுபட்டு துணிப்பொருள் ஆராய்ச்சி செய்து அயர்ன் பண்ணி...மடித்து...ஷ்ஷ்..அப்பா...
உண்மையில் கொலைசெய்துவிட்டு சிறைக்குப் போனவன்கூட இப்படி ஒரு ஏற்பாடுகள் செய்திருக்கமாட்டான்.
ஷேவிங் செய்யவேண்டும்...
முடி பறக்காத அளவிலும்,முகத்தில் வழியாத அளவிலும் எண்ணெய் பூச வேண்டும்.
செருப்புக்கும் கொஞ்சம் பாலிஸ் போட வேண்டும்..
வீட்டுக்குப்போனதும் இத்தனை வேலைகள் இருக்கு....
வீட்டுக்கு வந்துவிட்டேன்.
எத்தனை மணிக்கு தயாராகனும்?
வேற யார் யார் பேசுறாங்க?அழைப்பிதழ் பார்க்கலாமா?...
பார்க்கிறேன்.....
என் பெயர் இல்லை....
நேரம் அதிகம் இல்லை என்பதால் என் பெயரைக்குறைத்திருக்கிறார்கள்.
என் முன்னோர்கள் ஒரு பாவமும் செய்திருக்க மாட்டார்கள்.
மாயாண்டி சாமியும்,ஆத்தா உடையநாச்சியும் அவுங்க புள்ளய சிறைக்குள்ள விடுவாங்களா?..
இந்த முறை குலசாமி கும்பிட போயே ஆகணும்.காசு முடிந்து போடுகிறேன்.
பள்ளியில் சுதந்திரதின விழா முடிந்து சின்னவள் வந்துவிட்டாள்.
இப்போதுதான் தொடங்குகிறது சுதந்திரதினம் ....
எனக்கு....