சனி, 24 செப்டம்பர், 2016

நீளும் விரல்கள்...

முத்தம்மா அத்தைக்கு
எத்தனை பிள்ளை
பிறந்ததுன்னு
தெரியாது யாருக்கும்.

வியாழன், 22 செப்டம்பர், 2016

திண்ணைப்பேச்சு வீரர்கள்

அன்பின் சக்திக்கு,

வல்லுனர்கள் ஒவ்வொரு பத்துவருடங்களுக்கும் ஒவ்வொரு துறை அபரீத வளர்ச்சி அடைவதாகக் கூறுவார்கள்..

திங்கள், 19 செப்டம்பர், 2016

வியாழன், 15 செப்டம்பர், 2016

தேவை....தண்ணீரல்ல...

காவேரி பிரச்சனையில்
கவனம் சிதறடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளைகளில் வேறு பல நடந்துகொண்டிருக்கலாம்..

கார்ப்பரேட் மூளைகளின் வக்கிரங்கள் இன்னும் என்னவெல்லாமோ செய்யும்...

தொடங்கியதிலிருந்து பெட்ரோலிய விலைகளிலேயே ஒரு நூற்றாண்டுக்கான வருமானங்கள் கிடைத்திருக்கும்..
தக்கவைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

குஜராத் கோரமுகங்கள் வாசிக்கும் போது அத்தனை அதிர்ச்சியாக இருக்கிறது.

கணினிகளின் துல்லியத்தில் மனித மனங்களை கணித்து உணர்வுகளைத்திருப்பி சாதித்தவர்கள்..
இந்துத்வா, மதவாதம்,மாட்டுக்கறி, படுகொலைகள், காவேரி உட்பட எல்லாம் கவனம் திருப்பும் சாகசங்கள்.

ஆட்சி,பதவி வெறிகளின் உச்சத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அடுத்து வரும் தேர்தலை கவனித்துப்பாருங்கள்..இது வரை இந்தியா சந்தித்திராத பணம்,அதிகாரம் எல்லாம் தூள்பறக்கும்.

காவேரி என்பதும் இன்றைய பிரச்சனை அல்ல..
காலம் காலமாய் இருப்பது தான்.இவ்வளவு மோசமாக தூண்டக்காரணம் வேறு ஏதேனும் இருக்கும்..

கர்நாடகாவில் ஒன்றும் காட்டுமிராண்டிகள் வாழவில்லை.
மக்களின் மென்முனைகளைத் தட்டிவிட்டால் நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கும் இதுதான் நடக்கும்.

வாகனங்களை எரித்ததிலும் பின்புலம் இருக்கும்.
ஒரு மத்திய சட்டத்துறை அமைச்சராய் இருந்தவர்,
இன்னும் அமைச்சராய் இருப்பவர் மற்றொரு மாநிலத்தின் மீது மிகச்சாதாரணமாக குற்றம் சாட்டுவது இறையாண்மைக்கு ஏற்றதல்ல..

உள்ளபடி ஆயிரம் குறைகள் இங்கு உண்டென்றாலும் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்..தமிழ்
மக்களின் மனங்கள் பண்பட்டிருப்பது தெரிகிறது..

எல்லா இடங்களிலும் உணர்வுகளில் விளையாடுபவர்களின் சோதனை முயற்சி கூட தமிழகத்தில் தோற்றுப்போக 90 வயதுக்குப்பிறகும் மூத்திரப்பையை சுமந்து சுயமரியாதை வளர்த்த கிழவனின் தொண்டு அது.

என் தமிழகமே அந்தப்பெரியாரை இறைமறுப்புக்காய் திட்டுவதெனில் திட்டிவிட்டுப்போங்கள்..
ஆனால் சுயமரியாதையையும்,
பெண்ணினத்திற்காகப் போராடியதையும் இழிவுசெய்யாதீர்கள்.

காந்தி பிறந்த மண்ணில் தான் எல்லாம் பிறக்கிறது..
பெரியார் நடந்த மண்ணில் இன்னும் சுயமரியாதை சாகவில்லை..
அது சரியான வித்து.

அன்புடை நண்பர்களே..
இதுவும் கடந்து போகும்.
ஆனால் வரலாற்றில் நாம் பாடம் கற்றே ஆகவேண்டும்.
அவர்கள் காந்தியை மறந்து போகட்டும்..
நாம் அகிம்சையை மறக்கவேண்டாம்.
நடைபெறும் கலவரங்களின் புகையில் நீங்கள் பகையை பார்க்கின்றீர்கள்..
நான் உள்ளூற்றிய எண்ணையைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

அரசியல் கட்சிகள் யாவும் சமூக சேவைக்காய் அல்ல.
அவர்கள் சேவைக்காகவே.

நாம் என்று விளம்பரங்களில் சிக்காமல் விழிக்கின்றோமோ அன்றே விடியும் நம் நாள்.

ஆட்டுமந்தையென புலம்பலில் இன்பம் காணாமல் ஊடுருவிக்கிடக்கும் வன்மத்தைப் பாருங்கள்.

ஊடகங்களும்,
சமூகவலைத்தளங்களும் முற்றிலும் மக்களால் நடத்தப்படுபவை அல்ல..
எங்கெங்கும் அவர்களின் ஆக்டோபஸ் கரங்கள் நீண்டிருக்கும்.
வேறு எந்த சிந்தனையும் உங்கள் கவனத்தை திசைதிருப்பி விடாமல் பார்த்துக்கொண்டிருக்கும்.

விடிவென்பது சேவல் கூவியல்ல..
கண்கள் விழிப்பதில் தான்.

காசுக்கும்,மதுவுக்கும்,உணர்வுகளுக்கும் அடிமைப்பட்டு வாக்களித்தோமானால் இதுவும் நடக்கும்..இன்னமும் நடக்கும்..

வாக்கென்னும் அற்புதம் நம் கைகளில் தான் இருக்கிறது.

ஒற்றை நிமிட யோசனை புரட்டிப்போடக்கூடும் யாவையும்..
அந்த ஒற்றை நிமிடத்தையும் களவாடப்பார்ப்பார்கள்.

கம்யூனிச தோழர்களின் களப்பணி நேரமிது..
கண்டனங்கள் கூட கனத்துச் சொல்லாமல் இருப்பது கவலைக்குரியது.

சுயசிந்தனையும் சுயகட்டுப்பாடும் மட்டுமே..
தற்போது தலையாய தேவை..

ஒரு மழை கனத்துப் பெய்தால் காவேரியை அவர்களே திறப்பார்கள்..

பிழைகள் நம் பக்கம் தான்..
இனியேனும் அதை செய்யாதிருப்போம்.