செவ்வாய், 10 ஜனவரி, 2017

வலையில் விரியும் கதைப்பூக்கள்

அன்பின் சக்திக்கு..
வலைப்பூ உலகில் வந்து வருடமானாலும் என் தளம் தாண்டி மற்ற தளங்களில் அதிகம் உலவியதில்லை..




அதிர்ஷ்டவசமாக சில நாள்களுக்கு முன் ஒரு வலைப்பூ வாசித்தேன்..

தமிழ் சிறுகதைகள் கொட்டிக்கிடக்கின்றன..
தேர்ந்தெடுத்த தமிழின் சிறந்த சிறுகதைகள் யாவும் கிடைக்கின்றன..

கதைகளைக் காட்டிலும் நம் எழுத்தாளர்களின் அரிய புகைப்படங்கள் நம்மை ஒரு பரவச உலகம் நோக்கி அழைக்கிறது..

உனக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதோடு இந்த அரிய பணி செய்யும் நண்பர் ராம் அவர்களை வணங்கிப் போற்றுகிறேன்..
தள முகவரி...
http://azhiyasudargal.blogspot.in/


அன்புடன்
மீரா செல்வக்குமார்.

10 கருத்துகள்:

  1. நன்றி மீரா.செல்வக்குமார்

    பதிலளிநீக்கு
  2. சிறுகதை ரசிகர் ராம் அவர்களின் சிறுகதை ரசிகர்களுக்கான விரிந்தும் தளமாக அல்லவா இருக்கிறது!!! நன்றி செல்வா!

    பதிலளிநீக்கு
  3. மிக நல்ல தளத்தை அறிமுகப்படுத்திதியமைக்கு மிக்க நன்றிறி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர்கள் செய்யக்கூடிய நல்ல காரியங்களில் தலையாயது, தமக்குத் தெரிந்த நல்ல தளங்களைப் பிறருக்கும் பரிந்துரைப்பதே. ஏனெனில், அனைத்து தளங்களையும் தெரிந்துகொள்ளும் அளவுக்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை. எனவே, நீங்கள் செய்யும் இத்தகைய தொண்டு பாராட்டுக்குரியது.

    நாம் நன்றாக எழுதிகிறோம், நம் தளத்தை மற்றவர்கள் பார்க்கட்டுமே, என்பது ஓரளவுக்கே சரி. நாமும் மற்றவர்களின் தளங்களைப் பார்வையிட்டுக் கருத்துரை கூறவேண்டும். அதுதான் நாம் நமது மொழிக்குச் செய்யும் சிறந்த நன்றிக்கடன். அடுத்த இரண்டு தலைமுறைகளுக்காவது தமிழை அழியாமல் கொண்டு செல்லவேண்டிய கடமை நமக்கு உண்டு. வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியுஜெர்சியில் இருந்து.
    http://ChellappaTamilDiary.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு தள அறிமுகத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. அருமையான வளைத்தளம்ஒன்றினை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  7. அருமையான தள அறிமுகத்துக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு