சனி, 31 அக்டோபர், 2015

ரோஜாச்செடியில் முள்ளிருக்கும்

காங்ரீட் வயலில்
பிளாஸ்டிக்
தொட்டிகளில்
நட்டிடுக்கிறாள்..

அந்திமந்தாரை,
அரளி,
வாடாமல்லி
என
பல செடிகளை...

அடைமழை நாட்களிலும் குளிப்பாட்டுகிறாள்.

கன்னங்களில்
கரங்கள் வைத்து
நீண்ட நேரம்
மவுன உரை ஆற்றுகிறாள்..

சின்னவளுக்கு
என்மேல்
கோபமிருக்கக்கூடும்

முட்கள் நிறைந்த
ஒரு ரோஜாச்செடியை
பிடுங்கி
எறிந்ததற்காக......

வெள்ளி, 30 அக்டோபர், 2015

நான் ராஜாவாக்கும்......

எப்போதோ செய்த

தெர்மாகோல் 

சூரிய குடும்பமொன்று 

அவள் பெயருக்கு
மாறியிருக்கிறது.

சூரியனாய்
அவளிருந்து
சுற்றும்
கிரகங்களுக்ககு
பெயரிட்டவள்,

சனியை
எனக்கெனத்
தந்திருக்கிறாள்...

கோபமேறிய 

என்னைக் 

கொஞ்சுகிறாள் 

சின்னவள்,

சனிக்குத்தானடா 

கிரீடமிருக்கிறதென,...

இதுகூடவா செய்யமாட்டேன்?....

சின்னவள்
ஒருபோதும் காட்டியதில்லை மதிப்பெண் பட்டியலை.

என்ன பிரிவென்பதும்
இன்னும்
தெரியாதெனக்கு.

அவள் அம்மாவினால் அர்ச்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.

மெல்லச் சொல்லிவிட்டு போகிறேன்.

இனி என்னிடம் வா..
எத்தனை
கையெழுத்து வேண்டும்.

புதன், 28 அக்டோபர், 2015

அடி சறுக்கும்....

விஞ்ஞானம்
எந்த நாளும்
விடை காணமுடியாத,
வீட்டின் சமர்கள்
எப்படியும் நிகழ்ந்தே விடுகிறது.


அடங்க மறுத்தும்
அடக்கா நிலையிலும்
வலுத்துவிடுகிறது இரவு.
சப்தங்கள் வலுக்கும்போது
சட்டென விழிக்கிறாள்
சின்னவள்.
துளிர்க்கத்தொடங்குகிறது
விழியோரம் ஈரம்...

ஒரு யானையாய்
ஒடுங்கிப்படுக்கிறேன்.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

அலமாரி முழுசும் அவளுக்கு.....

அவள்
ஆடைகள்
விசயத்தில்
அழுத்தக்காரி.
கருஞ்சிவப்பு
கிளிப்பச்சை
இளமஞ்சள்
அதிகமாய்
பிரில் வைத்த
வெள்ளைவண்ண
தேவதை உடை..
எப்போதும்
அடம்பிடித்து மறுத்த
கத்தரிப்பூ வண்ண
கவுன்.

தற்குறிப்பேற்ற அணி

உங்களிடம்
ஒன்று
சொல்லிப்போவதற்காக
வந்திருக்கிறேன்.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

செவ்வாய், 20 அக்டோபர், 2015

விலைகொடுத்து வாங்கிய வில்லங்கம்

எதுவெல்லாம் கடினமென்று சொன்னார்களோ அதுவெல்லாம் வாழ்க்கையில் (ரொம்ப எளிமையா இல்லேன்னாலும்)நிறைவேறியிருக்கிறது எனக்கு.
கல்யாணம் செஞ்சுபார்..வீட்டைக்கட்டிப்பார் என்பார்கள்.என் பாட்டன்கள் எவ்வளவு கவனமாக ஒப்பிட்டு இருக்கிறான்...
அடடா.  ரெண்டுக்கும் 

செவ்வாய், 13 அக்டோபர், 2015

நானும் மீனும்

மீன்களுடனான என் உறவு என்பது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலங்களிலேயே மலர்ந்துவிட்டது.
அசைவம் சாப்பிடுவதென்பது தீபாவளியோடு இணைந்துவரும் ஒரு நிகழ்ச்சி என்னும் அளவுக்கு