சனி, 30 ஜூலை, 2016

தேடுங்கள்...கிடைக்கலாம்..

அறுபதாயிரம்
மனைவியர்
அடைத்துக்கிடந்த
அந்தப்புரத்தை..

ஒற்றை நரைமுடி
உதிர்ந்த
கூடத்தை...

பிள்ளைப்பேறு தரும்
பாயசத்தின்
சமையற்குறிப்பை..

கூனியின்
முதுகடித்த
சிறு
கவண் கல்லை..

தடாகை
கொன்ற
தவமுனிவன்
யாகசாலையை..

அகலிகை
கல்லாய்
காத்துக்கிடந்த
கட்டாந்தரையை..

மகனுக்கு
ஆட்சி கேட்டதால்
காலமெல்லாம்
காயப்பட்ட
கைகேயி
எரித்தோ
புதைத்தோ
விடுதலையான
புனித பூமியை..

உறங்கா விழிகள்
இலக்குவனுக்கெனில்
விடியா
இரவுக்குள்
ஊர்மிளையின்
சோகத்தை..

மூக்கறுத்த
கத்தியின்
துருப்பிடித்த பாகத்தை..

வானரம்
அழித்த
மாநகரின்
மிச்சத்தை..

ஜானகி
தீக்குளித்த
நெருப்பின்
மிச்சத்தை...

இராவணன்
காத்த
காதலின்
உச்சத்தை...

காகுத்தன்
தொலைத்த
வாலியின்
வன்கொலைக்களத்தை

காலக்கதையின்
மூலத்தை
தேடும்
விஞ்ஞானப்
புலிகளே...

விமானம்
தொலைந்து
வாரங்கள்
கடந்தது...

சின்ன பாகமும்
சிக்கவில்லை
என்பீர்கள்..

முலிகை
தேடுதல்...
நல்லது மக்களுக்கு..

சேர்த்தே
தேடுங்கள்...

அந்த
செருப்புகளும்
தேவை தான்..






4 கருத்துகள்:

  1. அருமை அண்ணா....
    கடைசி பாரா... வலி என்றாலும் அருமை....

    பதிலளிநீக்கு
  2. Selvakumar ayya, ungalukkullum thedinal innum ennenna padaipugal vandhu kottumo theriyavillai. Sogathai, baagathai, michathai, uchathai endrellam aruviyaay kottum ungal ezhuthin menmaiyai innum therugirom... Kidaikuma? Kaalangaalamaay puraana chiraikul inbamaay maatikondu vidiyaa vilakam sollum en samoogathai idhai Vida eppadi naasookaga kelviketka mudiyum? Neengal kuttiyadhil vinngnaanigaluku valikiradho illaiyo,engaluku valikiradhu. Super

    பதிலளிநீக்கு