வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

மண்ணில் இந்த....




பொல்லாத
பேரழகி..
அழகென்றேன்
பொய்யென்றாள்..
கவிதை
சொன்னேன்
யாருக்கென்றாள்..
நிலவென்றேன்
தேயவோ
என்கிறாள்..
சிலையே
என்கிறேன்
திருடவோ
என்கிறாள்..
முத்தே
என்கிறேன்...
நீ
மூச்சடைக்க
பாரேன்
என்கிறாள்..
நிழல்
நீ
என்றால்
சுடும் கால்கள்
படுவதற்கோ
நானென்றாள்.
குயிலென்றேன்
நிறம்
ஒப்பிட்டு
கரைகிறாள்.
வானமென்றேன்
தூரத்தில்
வைப்பதாய்
தூற்றுகிறாள்..
புயலாய்
இருக்கும்
உன்
மொழியென்றேன்
கயல்விழி
கசிய
பேரழிவோ
என்னால்
என்றாள்.
இதயம்
இருக்குமிடம்
நானென்றேன்
மற்றதெல்லாம்
யாருக்கென
போருக்கு
கிளம்புகிறாள்..
விடிவிளக்கே
வாயென்றேன்
ஊதி
அணைக்கவோ
என
எரிந்து
விழுகிறாள்.
நட்சத்திரம்
நீ யென்கிறேன்
எண்ணிக்கை
தெரியாததில்
நானுமொன்றோ
அழுகிறாள்.
வெட்கம்
அழகென்றேன்..

மற்றவற்றில்
பேயாவென
பதறுகிறாள்.
என்ன
சொல்லினும்
இப்படிச்சொன்னால்
என்ன
செய்வேன் நான்
போடி
என்றேன்...
ஓடிவந்து
ஒட்டிக்கொண்டாள்..

4 கருத்துகள்: