புதன், 12 ஆகஸ்ட், 2015

நுணலும் தன் கையாலும்.......

நுணலும் தன் கையாலும்.......
ஊழ்வினை வந்தல்ல.....
எனக்கெல்லாம் இருந்தே உறுத்தும்.
ஆறப்போகும் புண்ணைக்கிளறும் போது  கிடைக்கும் ஒரு இன்பம் நீங்கள் அறிவீர்களா?
அப்படியெனில் அதன் பின் வரும் வலியையும் தாங்கள் அறியாமல் இருக்க மாட்டீர்கள்.
எதோ ஊருக்கு வந்தமா நாலு இடத்தைப்பார்த்தமான்னு
இல்லாம போனதால வந்த வினைதான் எழுதத்தூண்டியது...
எப்பவுமே அழுது தொலைக்கிறமே.,...கொஞ்சம் மாற்றித்தான் பார்க்கலாம் என யோசித்தேன்.
சரி சனியனைத்தொட்டாச்சு...
நாலு கண்ணு பார்க்கிறதுக்குள்ள விட்டமான்னும் இல்ல....
முன்னல்லாம் பிள்ளைகளுக்கும் விவரம் பத்தாது ,சும்மா நெஞ்ச நிமிர்த்தி வைரமுத்து மாதிரி வாசிப்பேன்..அவள்களும் ஏதோ சந்தோசத்துல கையெல்லாம் தட்டுவார்கள். இப்பல்லாம் நான் காகித்தை எடுத்தாலே சின்னவள் பாடபுத்தகத்தை எடுத்து விடுகிறாள்.அப்படித்தான் நேற்றும் ஆனது..வாசிக்கத்தொடங்கும் முன்பே அவர்கள் காணாமல் போனார்கள்.எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குமல்லவா..அது எனக்கு நேற்றுதான் தெரிந்தது.அவர்கள் போனால் என்ன எப்பவுமே பேஸ்புக்,வாட்ஸப்புன்னு எத்தனையோ மகராசன் இதே வேலையா இருக்காக.....பொம்பளப்புள்ள குட்மார்னிங் சொன்னாலே ஆயிரம் லைக் விழுற இடத்துல நமக்கு ரெண்டு விழாமலா போயிருன்னு நம்பித்தாங்க ...அதைச் செஞ்சுட்டேன்..நம்ப நண்பர் ஒருத்தர் போன் பண்ணியே பேசிட்டார்...நல்லா இருக்குங்க ...எப்படிங்க உங்களுக்கு மட்டும் கிடைக்குது...அந்த குரூப்ப சொல்லுங்கன்னு ...வெந்த புண்ணில்...

ஊருக்கு போன ஊட்டம்மா ...அதிகாலை விஜயம்...
நேற்று காணாமல் போன பிள்ளைகள் ..எழுதிய காகிதங்களை காட்டியதோடல்லாமல் ,பின்னூட்டங்களையும் ஊட்டிவிட்டார்கள்.  அப்பவே(எப்பவேன்னு தான் தெரியல)சொன்னேன்.எழுதுனா யாருக்கிட்டயும் காட்டாதே..என்கிட்ட கொடு புத்தகமா போடுறேனு...எதைக்கேட்ட இதைக் கேட்க? ஏதாச்சும் எழுதுறது....ரெண்டே நாளுல  மறந்துடறது...இப்பவாச்சும் கேளு...தினம்தினம் எழுதி என் கிட்ட கொடு ... நான் பார்த்துக்கொல்கிறேன்...மன்னிக்கவும் பார்த்துக்கொள்கிறேன்.
பார்க்கலாம்.. எத்தனை நாள் எழுதுறன்னு?
இப்ப நான் என்னங்க பன்னுவது? இந்த நாள் இனிய நாளாக என்ன எழுதுவது?
நாளக்குத்தான் போகலாமுன்னு நினைத்துக்கொண்டிருந்தேன்....
இப்ப சாயக்கூட முடியாத ஒரு அரசுப்பேருந்தில் மூவர் அமரும் இருக்கைப்பிரிவில் நடுவில் இருக்கிறேன்....இதுவெல்லாம் கஸ்டமே இல்லங்க....கிளம்பும்போது சின்னவள் பழமொழி விளையாட்டுக்கு அழைத்தாள். பழமொழியின் பாதி அவள் சொல்வாள் மீதியை நான் சொல்லவேண்டும். என்ன கொடுமை சார்... முதல் பாதியைப்பாருங்களேன்
"நுணலும் தன்...…...   --அவள்
" கையாலும் கெடும்----நானே தான்.

2 கருத்துகள்:

  1. எல்லோரிடமும் உங்கள் கருத்துக்களை சொல்வதால் தான் இப்போ கூட உங்கள் கருத்துக்கலை ஆனந்த விகடனின் டைம்பாஸ் ல காப்பி அடிச்சுப் போட்டுருக்காங்க. கொஞ்சம் திடமா..தைரியமா.தயக்கமே இல்லாம நிறைய பேசலாம் ..ஆனால் நம் கருத்துக்களை பதிவு செய்யும் முன் வெளியிட்டால் இப்படித்தான் திருட்டு போகும்...ஜாக்கிரதை....மற்ற படி ஓ.கே...(என்னடா ஒரே வூட்டுல இருண்டுகினு இருவரும் இப்படி பிளாக்குலே பேசிக்கிறாங்களேனு மற்றவங்க நினைப்பாங்க...நமக்குத்தான் தெரியும் நீங்கள் அங்கே இருக்கும் போது நான் இங்கே...இங்கே இருக்கும் போது அங்கேனு)

    பதிலளிநீக்கு
  2. தொடந்து எழுத பாராட்டுக்கள்

    உங்க வுட்டுலையே சொல்லியச்சு
    வுடு ஜுட்

    பதிலளிநீக்கு