ஞாயிறு, 24 ஜனவரி, 2016

என்னைப் புசியுங்கள்...

சாத்தான்
தோட்டத்து
கனி நான்..

வரிசை வேண்டாம்..
வந்து
புசியுங்கள்..

சாபக்கனியென்று....
என்னை
சட்டெனத்
தள்ளாதீர்...

பசியிருப்போர்
உண்ணுங்கள்
பாவம்
பார்க்காதீர்...

பட்டினியாய்
வாழ்ந்திருந்து
பரலோகம்
தேடாதீர்.

இச்சையுள்ள
மனிதரெல்லாம்
இந்த
பச்சைக்கனி
பாருங்கள்..

காணாத
கடவுளுக்காய்..
காத்திருந்து
சோராமல்..

கை வரும்
கனி
நான்..
கண்கள் மூடி
போகாதீர்.

ஆதிக்கதை..
நீதிக்கதை,
சொன்னதெல்லாம்
கேட்டதனால்..
இன்றுவரை
கவலை கொள்ளா
மனிதருண்டா?

எனைத்தின்று
மோட்சம்
கிட்டார்
உம்மிடத்தில்
சொன்னதுண்டா?

காமம்
சீண்டும்
சாமத்துக்கனி
நான்...
பாவமென்போர்
போர்த்தித்
தூங்குங்கள்.

ஆமென்போர்
மட்டும்
அடுத்தும்
வாருங்கள்..

அனுதினமும்
முன்னேறும்
நுட்பம்
நானறிவேன்..

குறுஞ்செய்தி,
அலைபேசி,
கணினியிலும்
இந்த
கனி கிடைக்கும்..

வீட்டுக்கே
வந்தாலும்
விலையொன்றும்
கிடையாது..

கல்லிலும்
வேர்பிடிக்கும்
என்
விதையின்
வீரியங்கள்...

வலிய வந்து
ஆடுவதால்...
வான்கோழி
என்னை
வைய்யாதீர்..

மயில்
கொண்டு
பிரியாணி..?
சாத்தியங்கள்
இங்கு இல்லை.

கவலைகள்
இதுவரை..
கவ்வாதார்
என்னைத் தள்ளலாம்.

சாதி
நான்
பார்ப்பதில்லை..
சகலரும்
கொள்ளலாம்.

முடியுமெனில்
சொல்லுங்கள்..

உங்கள்
கடவுளுக்கும்
அனுப்பலாம்...































































7 கருத்துகள்:

  1. சிறப்பாகச் சொன்னீர்கள்..... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. செம கவிதை செல்வா...அருமை...ரொம்பவே ரசித்தோம்...

    பதிலளிநீக்கு