செவ்வாய், 6 செப்டம்பர், 2016

ராத்துணை....

அதைப்
பிடித்துப்போனதை
எளிதில்
சொல்லிவிடமுடியாது.

மிக லாவகமாய்
சாவித்துளையின் வழியேகூட
நுழைந்துவிடமுடியுமதனால்
கனவுகளிலும்
கால்வைத்ததையறிந்தது
பின்னிரவு கடந்தும்
புரண்ட நேற்றில் ..

உருவமற்ற
பிறப்பாயெனில்..
உருவங்கள்
பிறப்பதே
தன்னால் என்றது..

தள்ளித்தள்ளி
உதறுகிறேன்...
ஒளியின் தூசியாய்
விலகிப்பெருக்கிறது..

நினைத்த பூவின்
வாசம் வருகிறது..
மலைத்தேனடர்ந்த
அடர்கானகம்
கடந்திருக்கும்
சுவைகாட்டும் படர்கை..

புத்தகம் புரட்டிய
இமைகளின்
ரெப்பைமூடி
வன்முறை செய்யும்
உன்னை
எப்படித்தண்டிக்க?
மன்னிப்பதும்,
மரணம் தருவதும்
நானேயென்றும்
நாளைவருவதாய்
சொல்லிப்போனது.

நான் விழிக்கிறேன்.



4 கருத்துகள்: