வெள்ளி, 27 நவம்பர், 2015

நான் லூசாம்ங்க....

சின்னவள் 
பிறந்த
சில மாதங்களுக்கு
பின்னாலும் 
அவள்
பேசுவதற்கான 
அறிகுறிகள்
ஏதும் இல்லை.

வீட்டில் 
கோவில்களைச் சுற்றத் தொடங்கினாள்..

நான் மனசுக்குள் மருகிக்கிடந்தேன்..

நேற்றைய
மொட்டைமாடி இரவில்  கதைகளுக்கூடே 
இதை
அவளுக்கு
சொன்னேன்..

உம்ம்..
என்றிருந்தவள்.. 
உதைத்துவிட்டு
சொன்னாள்

போடா லூசு....

8 கருத்துகள்:

  1. அப்போதும் பேசத்தொடங்கிவிட்டாள்
    அகராதியிலு பொருளறியா கவிதைகளால்
    மழலையின் மொழி மழையைவிட மீயழகு!

    பதிலளிநீக்கு
  2. அருமை :)

    மனசுக்குள் மருகியதெல்லாம் இந்த மழலை மொழிக்காகத்தானே?

    பதிலளிநீக்கு
  3. ஹஹஹஹ்ஹ செம உதை போல....!!! ரசித்தோம்...!!!

    பதிலளிநீக்கு