செவ்வாய், 27 அக்டோபர், 2015

அலமாரி முழுசும் அவளுக்கு.....

அவள்
ஆடைகள்
விசயத்தில்
அழுத்தக்காரி.
கருஞ்சிவப்பு
கிளிப்பச்சை
இளமஞ்சள்
அதிகமாய்
பிரில் வைத்த
வெள்ளைவண்ண
தேவதை உடை..
எப்போதும்
அடம்பிடித்து மறுத்த
கத்தரிப்பூ வண்ண
கவுன்.



கயிறுகள் பிரிந்தும்
கால்களுக்கு இடையில்
கிழிந்தும்
கழட்ட மறுத்த
காவலர் சீருடை.
அவள் ஆடைகளடக்கிய
அலமாரி
நிரம்பியிருக்கிறது
பொக்கிசமென.
தொலைதூரம்
படிக்கப்போனவளின்
இன்றைய அழைப்பில்,
பண்டிகை உடையினை
நீயே எடு
என்கிறாள்.
தேர்ந்தெடுக்கவேண்டும்
என்னை
அப்பனாய்
தேர்ந்தெடுத்த
சின்னவளுக்கு.

12 கருத்துகள்:

  1. வாழ்க்கையை வண்ணமயமாக்கும் அழகு தேவதை...பூக்கள் இவள் புன்னகைக்குக் காத்திருக்கும்....முகத்தால் மட்டுமல்ல...அகத்தாலும் அதி சிறந்த அழகி

    பதிலளிநீக்கு
  2. தங்களின் அன்பு
    எழுத்துக்களில் வழிகின்றது
    சின்னவள்
    கொடுத்து வைத்தவள்

    பதிலளிநீக்கு
  3. அருமை .. அருமை..

    ஐந்தே ஒரே காரணத்திற்கு தான் நான் என் ராசாதிக்களை ... "என்ன பெத்த ராசாத்தி...? என்று அழைப்பேன். என்னை அப்பனாக பெற்றெடுத்தவள் அவள் தானே..

    அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. விசு சார்...நான் உங்கள் ரசிகன்...நீங்களே என் வரிகளை பாராட்டும் போது....ம்ம்...என்னத்த சொல்ல? நன்றி சார்.

      நீக்கு
  4. அருமை அருமை! சின்னவளின் பிரிவு?!! அழகு! ரசித்தோம் மிகவும்..சின்னவளையும், உங்கள் வரிகளையும்

    பதிலளிநீக்கு
  5. ஓ! அவளா...இவள்....!
    அழகுப் பொக்கிசம்.!
    வாழ்க! வளர்க!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா....இப்போது என்னை அடிக்கிறாள்....எழுத்துகளாலும்...
      http://chinnavalsurya.blogspot.in/.....இயன்றால் அவளுக்கு உங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள்...நன்றி அம்மா..

      நீக்கு