செவ்வாய், 27 அக்டோபர், 2015

தற்குறிப்பேற்ற அணி

உங்களிடம்
ஒன்று
சொல்லிப்போவதற்காக
வந்திருக்கிறேன்.


என் காலடித்தடங்கள்
எங்கேனும்
தெரிய
வாய்ப்பில்லை.
கல்லடித்தடங்கள்
நிரம்பிய
சாத்தான் நான்
வறுமை தின்ற
நாட்களின்
எஞ்சிய
வேளைகளில்
நான்
கனவுகள்
வேட்டையாடித்
திரிந்தேன்.
ஒரு பனித்துளி
விரயமாவதை
வியர்வை
வழிய
ரசித்திருந்தேன்.
கூட்டுக்குள்
நானிருந்த
நாள்களில்
புழுவொன்று
பட்டாம்பூச்சியாய்
பரிணமித்ததில்
பரவசமானவன்
நான்.
கண்ணடிகள்
சொல்லடிகள்
முகத்திலும்
முதுகிலும்
துப்பிய
அப்பிய
அசிங்கங்கள்.
தூக்கிச்சுமக்கிறேன்
மூட்டையென
உணர்வுகளை.
ரத்தமும் சதையும்
உள்ள மனிதர்களில்
நானும் ஒருவன்.
உணர்வெனும்
உப்பு மட்டும்
ஒருகல் தூக்கலாய்
திகட்டத்திகட்ட
காதல் செய்கிறேன்
என்னை.
உருகும்
தார்ச்சாலையில்
ஒற்றைச்செருப்புடன்
பொதி சுமப்பவன்
நான்.
மொழியின்
தீண்டலில்
சில வரிகள் செய்கிறேன்.
உறங்கா வேளைகளில்
வார்த்தைகள்
கொண்டு
அடுக்குகிறேன்
என்
வாழ்க்கையை.
என்னை
கவிஞன்
என்று
கர்வப்படுத்திப்
போகாதீர்கள்.
நான்
வார்த்தைகளின்
கஞ்சன்.
என்
எழுத்துக்கள்
என்
விரல்வழிப்
பிரசவங்கள்.
கவருமாயின்
கரம் குலுக்குங்கள்.
புரியவில்லை
எனில்
ஒரு புன்னகையோடு
போய்விடுங்கள்.
இல்லை
இது
கவிதைதானென்றால்.
சொல்லிவிட்டுப்போங்கள்.
இன்றைய நிலா முற்றத்துக்காக...
27.10.2015




7 கருத்துகள்:

  1. ///என்னை
    கவிஞன்
    என்று
    கர்வப்படுத்திப்
    போகாதீர்கள்.
    நான்
    வார்த்தைகளின்
    கஞ்சன்.///
    வார்த்தைகளில் கஞ்சன்தான் நீங்கள்
    ஆனால் அது உணர்த்தும் பொருளில்
    வள்ளல் அல்லவா தாங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு படைப்பாளிக்கு பரிசென்பது ஒரு சின்ன பாராட்டுதான்....அதை செய்யும் நீங்கள்.....மிகுந்த மரியாதைக்குரியவர்...நன்றிகள் இதயத்திலிருந்து...

      நீக்கு
  2. என்னது?!! வார்த்தைகளில் கஞ்சனா?!! அஹஹஹ்

    பாரிவள்ளல்! அதனால்தானே இத்தனை அழகான கவிதை பிறந்துள்ளது! ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
  3. “கல்லடித்தடங்கள்
    நிரம்பிய
    சாத்தான் நான்“ பெற்ற விழுப்புண்களில் விரியும் வரிகள் சரி.
    அதுஎன்ன...?
    “நான்
    வார்த்தைகளின்
    கஞ்சன்“?
    கஞ்சனால்தான் சுண்டக் காய்ச்சிய பாலாய்க் கவிதையைச் சுரக்க முடியும் “வள்ளல்கள்“ கவிதைவரிகள் தண்ணீராய்க் கரையும்
    நீங்கள் கஞ்சனாகவே இருங்கள், கவிதைக் கொடை வளரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா...உண்மையில் நான் உங்கள் மீதும் நம் குழுவின் மீதும் மிகப்பெரிய(?)மரியாதையும்.பிரியமும் வைத்திருப்பது கொஞ்சம் பொதுநலம் என்றாலும் அதிகம் நன்றியுணர்ச்சியே என்னை ஒரு பொருட்டாய் மதிக்கா நாட்களில் .....என்னையும் எழுதத்தூண்டிய உங்கள் மீதும் குழுவின் மீதும் .....முடியல......

      நீக்கு
  4. அனைத்தினையும் மூட்டை கட்டி போகியில் போட்டு விடுங்கள். யாருக்கிங்கில்லை போராட்டம்.தூக்கிச்சுமப்பதனால் தான் வலிகள் அதீதமாய் தோன்றுகின்றதோ என்னமோ? தூக்கிப்போட்டு விடுங்கள், சோகம் வருடிச்செல்லும் வரிகளை பிரவிக்கும் போது படிப்பவர்களையும் அதே சோகத்தினை உணரச்செய்யும் எழுத்தாற்றல் உங்களது!
    கவிஞர்கள் தம்மை தாமே மேதைகளென சொல்லிப்பெருமை காட்டும் இந்த நாட்களில் இப்படியும் சிலர், இதைத்தான் நிறை குடம் தளம்பாது என்பதோ?உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள் செல்வா சார்!

    பதிலளிநீக்கு